பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழாவை திருப்பூர் மாவட்ட அனைத்து நாடார் சங்கங்களின் கூட் டமைப்பு சார்பில் புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் சமுதாய பிரமுகர்கள், அரசு அதிகாரிகளை அழைத்து குடும்ப விழாவாக கொண்டாடுவது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் திருப்பூரில் தலைமை ஒருங்கிணைப்பாளர் மூலக்கரை ஆர். சுரேஷ்குமார் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் கள் எஸ். வி. பூமிநாதன், செல்லபாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் வருகிற ஜூலை மாதம் 21-ந் தேதி காமராஜரின் பிறந்த நாளை சிறப் பாக கொண்டாடுவது. அவரது ஆட்சி காலத்தில் கொண்டுவந்த மதிய உணவு திட்டம் தற்போது எம். ஜி. ஆர். சத்துணவு திட்டம் என்ற பெயரில் செயல்ப டுத்தப்படுகிறது. அதனை மீண்டும் மதிய உணவு திட் டம் என்ற பெயரில் நடைமுறைப்படுத்த வேண்டும் என் பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. கூட்டத்தில் திருமுருகன் பள்ளி குழும தலைவர் மோகன், பனங்காட்டுபடை கட்சி மாநில ஒருங்கிணைப் பாளர் இரா. இமானுவேல், நெல்லை-தூத்துக்குடி மாவட்ட நாடார்கள் ஐக்கிய சங்கத்தின் பொருளாளர் ஜாய்ஸ் அருள்ராஜ், துணைசெயலாளர் ஜி. அருள்ராஜ், காமராஜர் மக்கள் பாதுகாப்பு பேரமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் என். ஆர். வேலாயுதம், காமராஜர் மக்கள் மன்ற தலைவர் ஆர். அய்யம்பெருமாள், கவுரவ தலைவர் கே. மதியழகன், அகில இந்திய நாடார் பாதுபாது காப்பு பேரவை திருப்பூர் மாவட்ட செயலாளர் எம். அந் தோணி, தொழிலதிபர்கள் அசோக் பாக்யராஜ், முத்து ராஜ், திருப்பூர் வாழ் ஏழாயிரம் பண்ணை உறவின் முறை நிர்வாகிகள் எம். மாரியப்பன், வெங்கடேசன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.