திருப்பூரில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் பணியிலிருந்த வள்ளலை விடுவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு -- ஆட்சியரின் அறிவிப்பை கொண்டாடும் விதமாக விவசாயிகள் இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்!!
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த வள்ளல் என்பவர் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆய்வுக்கூட்டங்கள் மற்றும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்து வந்ததாகவும் , மேலும் மாவட்ட ஆட்சியர் புவியியல் மற்றும் சுரங்க துறை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிய நிலையில் அதனை அமல்படுத்தாமலும், கல் குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாகவும். , எந்த அனுமதியும், சம்மந்தமும் இல்லாத கோம்தி என்ற பெண்ணை பணிக்கு அமர்த்தி, விவசாயிகள் பொது மக்கள் கல் குவாரிக்கு எதிராக கொடுக்கும் புகார் மனுவை கல் குவாரி உரிமையாளருக்கே அனுப்புவது என மாவட்ட நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வள்ளலை பணியில் இருந்து விடுவித்து
சச்சின் ஆனந்த் என்பவரை நியமனம் செய்தார். இதனை வரவேற்கும் வகையிலும். , வள்ளலை பணி நீக்கம் செய்ததை கொண்டாடும் விதமாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்