திருப்பூர்: விபத்தில் சிக்கிய சாலையை கடக்க முயன்ற மான்

54பார்த்தது
திருப்பூர்: விபத்தில் சிக்கிய சாலையை கடக்க முயன்ற மான்
திருப்பூர் அருகே குங்குமம்பாளையம் பிரிவு பகுதியில் வழித் தவறி வந்த மான் பல்லடம் திருப்பூர் சாலையை கடக்க முயன்றபோது திடீரென சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் மானின் தலை மற்றும் கால் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. 

இந்த விபத்தில் படுகாயம் அடைந்து துடித்துக் கொண்டிருந்த மானை கண்ட அப்பகுதியினர் உடனடியாக பல்லடம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று விபத்தில் சிக்கிய மானை மீட்டு வடுகபாளையம் கால்நடை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அந்த மானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி