தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் கூத்தாம்பாளையம் பிரிவில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் கல்யாணசுந்தரம், பொருளாளர் சவுந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்குமார், தெற்கு மாவட்டத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர் வரவேற்றனர்.
இதில் சங்கத்தின் மாநிலத் தலைவர் டைமன் ராஜாவெள்ளையன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சங்க வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான பணிகள் மற்றும் மே 5-ஆம் தேதி வணிகர் தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது தொடர்பாகப் பேசினார். முடிவில் வடக்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் மே 5-ஆம் தேதி வணிகர் தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, கிளைச் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.