திருப்பூர்- வஞ்சிபாளையம் இடையே காவிலிபாளையம் அருகே தண்டவாளத்தில் நேற்று மர்ம ஆசாமிகள் கல் வைத்துள்ளனர். அப்போது அந்த வழியே வந்த சரக்கு ரெயில் ஏறிச் சென்ற போது அந்த கல் நொறுங்கியுள்ளது. சிறிய கல் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தொடர்ந்து ரெயில் தண்டவாளத்தில் கல் வைத்தது யார்? ரெயிலை கவிழ்க்க சதியா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு தண்டவாளத்தில் கல் வைத்து ரெயிலை கவிழ்க்க சதி செய்தால் என்ன தண்டனை என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.