மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்

558பார்த்தது
மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படும்
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ. பி. முருகானந்தம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் சூறாவளி பிரசாரம் மேற் கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று திருப்பூர் பகுதிக் குட்பட்ட அனுப்பர்பாளையம், அம்மாபாளையம், தண்ணீர் பந் தல், பெரியார் நகர், புதிய பஸ் நிலையம், சாமுண்டிபுரம், எஸ். ஏ. பி. தியேட்டர், அண்ணா காலனி, ஜீவா காலனி, ஸ்ரீநகர், அய்யம்பாளையம், கணக்கம்பாளையம் பெருமாநல்லூர் உள் ளிட்ட 30-க்கும் மேற்பட்ட பகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட் டார். அந்தந்த பகுதி மக்கள் ஏ. பி. முருகானந்தத்தை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ஏ. பி. முருகானந்தம் பேசியதாவது
மத்திய அரசின் எண்ணற்றத் திட்டங்கள் நேரடியாக மக்க ளுக்கு கொண்டு சேர்க்கப்படும். தமிழகத்தில் மின் கட்டண உயர்வால் திருப்பூரில் புகழ் பெற்ற பாத்திர தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை குறைக்க மாநில அர சிடம் அழுத்தம் கொடுக்கப்படும். அதேபோல் திருப்பூர் மத் திய பகுதியில் சட்டக் கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும். திருப்பூர், ஈரோடு பகுதியில் மத்திய அரசின் நவோதயா பள்ளி ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.

தொடர்புடைய செய்தி