திருப்பூர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 100க்கும் மேற்பட்டோர் கைது.
திருப்பூர் அங்கேரிபாளையம் டாஸ்மாக் கிடங்கு முன்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து, ஏ. பி. முருகானந்தம் தலைமையில் பாஜக. , வினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கேரிபாளையம் சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். அப்போது பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.