திருப்பூர்: மகளிர் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை

75பார்த்தது
திருப்பூர்: மகளிர் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை
திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் செயல்பாடுகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். அப்போது மகளிர் திட்டத்தில் விடுபட்ட மகளிரை இணைத்தல், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு பெறுதல், மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட திட்டங்களில் செயல்படுத்தப்படும் பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்ட பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், நடப்பாண்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு நடந்தது. மகளிர் திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அனைத்தையும் பொதுமக்கள் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு திட்டங்களை கொண்டு சேர்க்க அலுவலர்கள், பணியாளர்கள் முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் மகளிர் திட்டத் திட்ட இயக்குநர் சாம்சாந்தகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி