சரியாக மூடப்படாத சாலை குழியில் கவிழ்ந்த லாரி

80பார்த்தது
சரியாக மூடப்படாத சாலை குழியில் கவிழ்ந்த லாரி

திருப்பூர் வலையங்காடு-சாமுண்டிபுரம் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு குழி தோண்டப்பட்டது. ஆனால் அந்த குழி சரியாக மூடப்படா மல் இருந்தது. இந்த நிலையில் அந்த வழியாக வந்த டிப்பர் லாரி அந்த குழியில் சிக்கி பாதி அளவிற்கு கவிழ்ந்து நடு ரோட்டில் நின்றது. இதனால் அங்கு போக்குவரத்து கடுமை யாக பாதிக்கப்பட்டது. நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு லாரி அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் அதிகாரிக ளின் அலட்சியத்தால் சரியாக மூடப்படாமல் இருந்த குழியும் மூடப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி