சூதாடிய 6 பேர் கைது

2018பார்த்தது
சூதாடிய 6 பேர் கைது
சூதாடிய 6 பேர் கைது பொங்கலூர் , அருகே உள்ள எஸ். வேலாயுதம்பாளையம் ஆண்டிகாட்டுத் தோட்டம் பகுதியில் சூதாட்டம் நடப்ப தாக அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சுமார் 6 பேர் சூதாடியதை கண்டுபி டித்தனர். உடனடியாக அவர்களை சுற்றி வளைத்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ. 10 ஆயிரத்து 700 - ஐ பறிமுதல் செய்தனர். 5 மேலும் சூதாட்டத்தில் ஈடுபட்ட எஸ். வேலாயுதம்பாளை யத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி ( வயது 50 ) , அதே ஊரைச் சேர்ந்த பழனிசாமி ( 76 ) , கோவில்பாளையத் தைச் சேர்ந்த ஈஸ்வரன் ( 62 ) , தொட்டிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி ( 53 ) , எஸ். வேலாயுதம்பாளையத் தைச் சேர்ந்த சுப்பிரமணி ( 52 ) மற்றும் காட்டூர் புதூ ரைச்சேர்ந்த பாலாமணி ( 59 ) ஆகிய 6 பேரை போலீ சார் கைது செய்தனர்.

டேக்ஸ் :