திருப்பூர், காங்கயம் ரோடு நல்லூரை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி (வயது 52). இவருக்கு காசிபாளையத்தில் சொந்தமான டையிங் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் பலரும் பணியாற்றி வருகின்றனர்.
இந்தநிலையில் முத்துக்குமாரசாமியின் டையிங் நிறுவனத்தில் சாயமேற்றிய ரூ. 6 லட்சம் மதிப்புடைய 2 ஆயிரம் கிலோ பனியன் துணியை டெலிவரி கொடுப்பதற்காக நிறுவனத்தில் பணியாற்றும் லட்சுமண பெருமாள், ராமசுப்பு, சுப்பிரமணி ஆகியோர் வேன் மூலம் எடுத்துச் சென்றுள்ளனர். 4 பேர் கைது அந்த துணியை சம்பந்தப்பட்ட இடத்தில் டெலிவரி கொடுக்காமல் இடுவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் மூலமாக வேறு ஒருவருக்கு குறைந்த விலைக்கு விற்று மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அறிந்ததும் முத்துக்குமாரசாமி நல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்சுமண பெருமாள் (35), அவருடைய சகோதரர் ராமசுப்பு (37), சுப்பிரமணி (36), ரமேஷ் (39) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 ஆயிரம் கிலோ துணியை மீட்டனர்.