திருப்பூர் ரயில் நிலையம் பகுதியில் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக நின்ற 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது 26), நவீன்குமார் (24) என்பதும், அவர்களிடம் 5 கிலோ 400 கிராம் புகையிலை பொருட்கள் இருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களைக் கைது செய்து புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.