திருப்பூர் மாநகரில்
14 போலீஸ் ஏட்டுகள் சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு
தமிழக காவல்துறையில் 1999-ம் ஆண்டு காவலர்களாக பணி யில் சேர்ந்து 2014-ம் ஆண்டு தலைமை ஏட்டுகளாகி 10 ஆண் டுகள் பணி நிறைவு செய்தவர்க ளுக்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்களாக பதவி உயர்வு வழங் கப்பட்டுள்ளது. திருப்பூர் மாந கர போலீஸ் நிலையங்களில் ஏட்டுகளாக பணியாற்றி 10 ஆண்டு முடிந்த 14 பேர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதன்படி நல்லூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணி யாற்றிய பாண்டியன், அனுப் பர்பாளையம் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றிய காளியப் பன், ராஜா, கிருஷ்ணமூர்த்தி, 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய ஜெயசீலன், முரளி, திருமுருகன் பூண்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய மருதபாண்டி யன், பி. ராஜா, மத்திய போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய யுவ ராஜ், ராமர், தெற்கு போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய பிரபாகர், செந்தில்ராஜா, செந் தில்குமார், சி. சி. ஆர். பி. பிரிவில் பணியாற்றிய முருகநாதன் ஆகிய 14 பேருக்கு கடந்த 1-ந் தேதி முதல் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார்.