பொங்கலூர் அருகே உள்ள பெருந்தொழுவு கரட்டுப்புரைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 30). இவருக்கு திருமணம் ஆக வில்லை. கட்டிட வேலைக்கு சென்று வந்த தாமோதரன் திடீ ரென சம்பவத்தன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாமோதரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.