திருப்பூர் மாவட்டம் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான போட்டிகள் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றன. போட்டிகளை நகர திமுக செயலாளர் வேலுச்சாமி, நகரமன்ற தலைவர் துவக்கி வைத்தனர். நாலு வயது முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பல்வேறு விதமான போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகளை நகர செயலாளர் வழங்கினார்.