பல்லடத்தில் பட்டாசை கையில் பிடித்து வெடித்த ஆசாமி பரபரப்பு

69பார்த்தது
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அச்சுறுத்தும் வகையில் பட்டாசை கையில் பிடித்து வெடித்த ஆசாமியால் பரபரப்பு 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் இந்து முன்னேற்றம் கழகத்தின் சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஏற்றி வடுகபாளையம் பகுதியில் தொடங்கி உடுமலை பொள்ளாச்சி சாலை சந்திப்பு மற்றும் நால்ரோடு பகுதி வரை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்த ஊர்வலத்தில் இளைஞர்கள்  மேள தாளங்கள் முழங்கி நடனமாடியும் பட்டாசு வெடித்தும் உற்சாகமாக கலந்து கொண்டனர். அப்போது போதை ஆசாமி ஒருவர் வான வேடிக்கையாக வெடிக்கும் பட்டாசு பெட்டியை பொதுமக்களையும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களையும் அச்சுறுத்தும் வகையில் கையில் பிடித்து கொண்டு வெடிக்க ஆரம்பித்தார். ஊர்வலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மங்கலம் காவல் ஆய்வாளர் உடனடியாக தனது பூட்ஸ் காலால் எட்டி உதைத்து போதை ஆசாமி கையிலிருந்து தட்டி விட்டார். திடீரென போதை ஆசாமி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பட்டாசை கையில் பிடித்து பொதுமக்களை நோக்கி பட்டாசு வெடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி