திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே மைவாடி ஊராட்சி கருப்புசாமி புதூரை சேர்ந்த கே. ஈஸ்வரசாமி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 5 லட்சத்து 33 ஆயிரத்து 337 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் 2,79,966 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வசந்தராஜன் 2,21,770வாக்குகளையும் பெற்றனர். இதனால் கே. ஈஸ்வரசாமி 2 லட்சத்து 52 ஆயிரத்து 42 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை அடுத்து கே. ஈஸ்வரசாமி சமூக வலைதளங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.