திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொமரலிங்கம் மேற்கு கிராமம் சாமராயப்பட்டி பகுதியில் திரு சுப்பிரமணி என்பவரின்
ஓட்டு வீடு, நேற்று பெய்த கனமழையில் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. இதனை அடுத்து இன்று காலை வட்டாட்சியர் பானுமதி அவர்களால், நேரில் ஆய்வு செய்யப்பட்டு, மழை நிவாரண தொகை வீட்டின் உரிமையாளரிடம் வழங்கப்பட்டது.