சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை எம் எல் ஏ ஆய்வு

956பார்த்தது
சூறாவளியால் சேதமடைந்த பகுதிகளை எம் எல் ஏ ஆய்வு
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மடத்துக்குளம் ஒன்றியத்தில் பாப்பாங்குளம், சாமராயப்பட்டி ரெட்டியாபாளையம், உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட கடும் சூறாவளி காற்று மற்றும் மழையினால் சேதமடைந்த பகுதிகளை, மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான மாண்புமிகு C. மகேந்திரன் அவர்கள், இன்று மாலை நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்
மேலும் அரசு அதிகாரிகளிடம், அவர்களுக்கு உரிய இழப்பீட்டு நிவாரண தொகை விரைந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். நிகழ்வில் வட்டாட்சிய செல்வி, துணை வட்டாட்சியர் பாரதிராஜா, வருவாய் ஆய்வாளர் அருள் கிராம நிர்வாக அலுவலர்கள் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அருண், மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் SP. சிவலிங்கம் மற்றும் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி