மடத்துக்குளம்: ராஜவாய்க்காலில் கழிவு நீர் கலப்பு

57பார்த்தது
மடத்துக்குளம்: ராஜவாய்க்காலில் கழிவு நீர் கலப்பு
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சாகுபடி பிரதானமாக உள்ளது. இந்த நிலையில் பழைய ஆசன முறையான அமராவதி பழைய ஆயக்கட்டு பகுதியில் நீர் வரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பிரதான கால்வாய்களுக்கு ராஜவாய்க்கால் என பெயரிட்டு பாதுகாத்து வந்தனர். ஆனால் தற்போது ராஜவாய்க்கால் திறந்தவெளி சாக்கடையாக மாறி உள்ளது. மேலும் கழிவு நீரும் ராஜவாய்க்காலில் கலந்து வருவதால் விவசாயிகள் பாதிக்கும் அபாயம் உள்ள காரணத்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ராஜவாய்க்காலை தூர்வாரி கழிவுநீர் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி