திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இந்த நிலையில் தற்சமயம் காய்கறிகள் நடவு செய்ய சீசன் துவங்கியுள்ளதால் கண்ணமநாயக்கனூர், சீன்னவீரன்பட்டி உட்பட பல்வேறு பகுதியில் நாற்றுப் பண்ணையில் தக்காளி, கத்திரி, மிளகாய் உள்ளிட்ட நாற்றுகள் உற்பத்தி செய்யும் பணி தற்போது தீவிரம் அடைந்துள்ளது.