திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பாப்பான்குளத்தில் வைக்கோல் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் லாரி டிரைவருக்கு தகவல் தெரிவித்து லாரியை பாதுகாப்பாக நிறுத்தினர். உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் தீயை முற்றிலுமாக அணைத்தனர்.