மடத்துக்குளம் அருகே தீ விபத்தில் முதியவர் உயிர்இழப்பு!

2பார்த்தது
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில் 70 வயதான விஸ்வநாதன் என்ற முதியவர் 8 ஆண்டுகளாக முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு வாய் பேச முடியாமல் தனது மகளுடன் வசித்து வந்தார். இன்று மதியம் இவர் வசித்து வந்த குடிசையில் தீப்பிடித்து மளமளவென பரவியது முதியவர் படைத்திருந்த கட்டில் தலையணை மெத்தை போன்ற போர்வைகளில் பரவியது. இதில் விஸ்வநாதன் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் இது குறித்து மடத்துக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி