திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கருப்புசாமி புதூரை சேர்ந்த கே ஈஸ்வரசாமி அவர்கள், நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் இந்தியா கூட்டணி வேட்பாளராக பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து இன்றைய தினம் (07/06/2024) கழகப் பொதுச் செயலாளரும்
மாண்புமிகு நீர்வளத் துறை அமைச்சருமான திரு. துரைமுருகன் அவர்களையும், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர்
திரு. கதிர் ஆனந்த் அவர்களையும் சென்னையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.