திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூரில் காரத்தொழுவு சாலையில், கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுத்தி வந்த நிலையில், ஏற்கனவே கழிவு நீர் வெளியேறிய பாதையில் அனுமதி பெற்று மீண்டும் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இந்நிலையில் நிலத்தின் புதிய உரிமையாளர்கள் கழிவுநீர் கால்வாய் செல்வதற்கு அனுமதி மறுத்து புதிதாக தோண்டப்பட்ட கழிவு நீர் கால்வாய் குழிகளை ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மண் போட்டு மூடியுள்ளனர். இதனால் மீண்டும் கழிவு நீர் தேங்கும் அபாயமும், சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழலும் உருவாகி உள்ளது.