திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பாப்பான் குளத்தில் நேற்று மாலை அதிவேகமாக வீசிய சூறாவளி காற்றுக்கு ஜோதிமணி என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டிருந்த, அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த வாழை மரங்கள் சேதமாகியது. இதுகுறித்து தோட்டக்கலை துறையினர் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.