திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பெரிய வாளவாடி ஊராட்சி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம், விளையாட்டு மைதானம், பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி வருகின்றன. ஒரு சில நேரங்களில் பொதுமக்களை கடிக்க வருவதால், சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.