திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் இருந்து மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள கண்ணகி கோவிலான செல்லாத்தம்மன் கோவில் முன் தமிழக பாஜக கட்சி மகளிர் அணி சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் மாணவிக்கு நீதி கேட்கும் போராட்டத்தில் கலந்து கொள்ள மடத்துக்குளத்தில் இருந்து 25 பேர் புறப்பட்டு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மடத்துக்குளம் காவல்துறையினர் 25 பேரை கைது செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மண்டபத்தில் அடைத்தனர். இந்த சம்பவத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.