வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பணி நீக்கம்

66பார்த்தது
வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் பணி நீக்கம்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தீயணைப்பு நிலைய அலுவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன் (52). இவருக்கு திருமணம் ஆகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் முதல் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது ஆக ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இது குறித்து முதல் மனைவிக்கு தெரிய வந்ததும் அவர் பிரபாகரன் இரண்டாவது திருமணம் குறித்தும் அவருடைய பணிபதிவேட்டில் வாரிசு பதிவு குறித்தும் தீயணைப்பு துறை உயர் அதிகாரியிடம் புகார் செய்தார். இந்த புகார் மீது கோவை மண்டல தீயணைப்புத்துறை இணை இயக்குனர் சரவணகுமார் உத்தரவின் பேரில் திருப்பூர் மாவட்ட தீயணைப்பு அலுவலர் விசாரணை நடத்தினர். விசாரணையில் முதல் மனைவி இருக்கும் போது சட்டத்துக்கு புறம்பாக பிரபாகரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து இருப்பதும் சட்டப்படி திருமணம் செய்யாத பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளை முறைகேடாக பணி பதிவேட்டில் பதிவு செய்து இருப்பதும் கண்டறியப்பட்டது.  இதை அடுத்து பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக பிரபாகரனை தீயணைப்புதுறை இணை இயக்குனர் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி