காங்கேயத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கோவில் பூசாரி பலி
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்து பாப்பினி பெரியநாயகி அம்மன் கோவில் பூசாரி சரவணன் பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து-பலி.
காங்கேயம் அருகே உள்ள பாப்பினி ஊராட்சியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வயது 34, இவர் அங்குள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் பூசாரியாக
வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முத்துலட்சுமி வயது 30. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் நிதர்ஷனா வயது 8 மற்றும் காவியா வயது 5 உள்ளனர்.
நேற்று மதியம் தனது சொந்த வேலையாக வீட்டிலிருந்து காங்கயம் வந்துள்ளார். பின்னர் வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு செல்வதற்க்காக காங்கயம்-கரூர் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காங்கேயத்திலிருந்து கரூர் ரோட்டின் வழியாக தனது வீட்டுக்கு செல்லும் போது தனியார் எடை நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சரவணன் பலத்த காயமடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் சரவணனை காங்கயம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சரவணன் உடலை பரிசோதித்த மருத்துவர் சரவணன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். காங்கயம் போலிசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.