திருப்பூர்: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கிய ரோட்டரி நிர்வாகி

80பார்த்தது
திருப்பூர்: கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து வழங்கிய ரோட்டரி நிர்வாகி
வெள்ளகோவில் கடந்த 109 வாரமாக அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு ரோட்டரி சார்பில் ஊட்டச்சத்து பொருட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த ஊட்டச்சத்து பொருட்கள் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை வழங்கப்படுகின்றன. அதில் பேரிச்சம்பழம், முட்டை, பாசிப்பருப்பு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட பல்வேறு ஊட்டச்சத்து பொருட்கள் உள்ளடங்கியுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை 110வது வாரம் வழக்கம்போல் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் கலந்துகொண்டு ஊட்டச்சத்து பொருட்களைப் பெற்றுச்சென்றனர். இந்த நிகழ்வில் மருத்துவர் திருமதி ராஜலட்சுமி, அட்மின் சேர்மன் ரொட்டேரியன் ராசிசின்னசாமி, தலைவர் ரொட்டேரியன் சுவாமிநாதன், செயலாளர் ரொட்டேரியன் சிட்டிப்பிரபு, ரொட்டேரியன் பிரபு ஆடிட்டர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி