வெள்ளகோவில் நகராட்சி சார்பில் நேற்று பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி

849பார்த்தது
வெள்ளகோவில் நகராட்சி சார்பில் நேற்று பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி
வெள்ளகோவில் நகராட்சி சார்பில் ‘எனது குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பின் கீழ் வெள்ளகோவில் டி. ஆர். நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டன.  போட்டியில் வெற்றி பெற்ற மாணவ -மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  பிறகு வெள்ளகோவில் வாரச்சந்தை வளாகத்தில் மக்கும் குப்பை,  மக்காத குப்பை தனித்தனியாக ரகம் பிரித்து இயற்கை உரம் தயாரித்தல் பற்றி செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது.  நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவி மு. கனியரசி,  துணைத்தலைவி விஜயலட்சுமி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள்,  நகராட்சி ஆணையாளர் ஆர். மோகன்குமார்,  சுகாதார ஆய்வாளர் எஸ். சரவணன்,  மகளிர் சுய உதவி குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :