காங்கேயத்தில் வருவாய் துறையினரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

79பார்த்தது
காங்கேயம் காடையூர் அருகே பசுவன்மூப்பன்வலசில் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த பொது மக்களுக்கு சொந்தமான குலதெய்வம் கோவிலை மாற்று சமுதாயத்தினர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் வழிபட இடையூறு செய்வதாகவும் குற்றம் சாட்டி வந்தனர். பசுவன்மூப்பன்வலசு பகுதியில் உள்ள நாடார் சமுதாயத்தின் ஸ்ரீ மீனாட்சி அம்மன் பிரசன்ன ஸ்ரீ கருங்குட கருப்பணசாமி மற்றும் ஸ்ரீ காணியாளசுவாமி  கோவில்கள் மாற்று  சமூகத்தின் தோட்டத்திற்கு உள்ளே உள்ளதாகவும் இதனால்  ஒவ்வொரு முறையும் சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்றால் அவர்களிடம் சாவியை வாங்கி செல்ல வேண்டியுள்ளதாகவும், கோவில்  இடத்தை மீட்டுத் தரவும் காங்கேயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு தரப்பினருக்கு சுமுக முடிவு எட்டப்படவில்லை. பசுவன்மூப்பன்வலசு என்ற ஊரின் பெயர் பலகையை அகற்றிவிட்டு தற்போது  பசுவன்வலசு என மாற்றுவதற்கு முயற்சி செய்வதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது தாராபுரம் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் அகியோர்களிடம் கோரிக்கை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை அதனால் வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து காங்கேயம் பேருந்து நிலையத்தில் இமானுவேல் நாடார் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் புதிய திராவிட கழகத்தினருடன்  இணைந்து வருவாய் துறை அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி