திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் பேரூராட்சி பகுதியில், தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
மூலனூர் பேராட்சியில், தெரு நாய் பெருக்கம் அதிகரித்து விட்டது. இதைக் கட்டுப்படுத்த பேரூராட்சி முறையான நடவடிக்கை எடுக்காததால், தற்போது நாய்கள் பெருக்கம் அதிகரித்து விட்டது.
இந்த நாய்கள், கூட்டம் கூட்டமாக நெடுஞ்சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலையில் மையத்தில் இருப்பதால், டூ - வீலரில் செல்வோர் விபத்தை சந்திக்கின்றனர். சாலையில் நடந்து செல்வோரை கடிப்பது. குழந்தைகளை துரத்துவது, இறைச்சிக் கடை உள்ள பகுதியில், உணவை தேடி அங்கும், இங்கும் ஓடுவது என, தொடர்ந்து நாய்கள், பொதுமக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன. எனவே நாய்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்து நாய்களின் எண்ணிக்கை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.