காங்கேயம் தம்மரொட்டிபாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி கவுண்டர்(55) 100-நாள் வேலை செய்து வந்தார். அதே ஊரைச் சேர்ந்த நடராஜ் என்பவர் மகள் சரண்யா வயது 22. சரண்யா அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி மகன் தங்கராஜ் வயது 28 என்பவரை காதலித்து வந்தார். சரண்யா தங்கராஜ் காதல் திருமணத்தை குமாரசாமி முன் நின்று திருமணம் செய்து வைத்தார். அப்போதே நடராஜ் குமாரசாமி தகராறு செய்தார். இதனால் இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் 2014 ஒரத்தபாளையம் டேம் செல்லும் ரோட்டில் 100-நாள் வேலை நடந்து கொண்டிருந்தது.
குமாரசாமி வேலை செய்து கொண்டிருந்தார். அங்கு வந்த நடராஜ் உன்னால் தான் என் குடும்பம் வீணாகிப் போனது எனக் கூறி குமாரசாமி கடப்பாரையால் தாக்கினார். பலத்த காயமடைந்தவரை முதல் சிகிச்சைக்கு காங்கேயம் அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து இறந்த குமாரசாமி மனைவி சகுந்தலா காங்கேயம் போலீசில் புகார் செய்தார். காங்கேயம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து நடராஜை கைது செய்தனர். இவ்வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி சரவணன் வழக்கை விசாரித்து நடராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் ரூ. 6000 அபராதம் விதித்தார். தீர்ப்பை அடுத்து போலீசார் நடராஜை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.