அவினாசி அருகே கோவை-சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரமாக அடையாளம் தெரியாத வாகனம் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை கவனித்த அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அவினாசி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தில் இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர், விபத்தை ஏற்படுத்திய வாகனம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.