அவினாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள், குழந்தைகளை துரத்தி கடிக்க வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டோரம் நின்றிருந்த குழந்தையை சில நாய்கள் துரத்தியதில் குழந்தை கீழே விழுந்து விட்டது. நல்ல வேலையாக நாய் கடிக்கவில்லை.
தெருவில் நாய்கள் மிக அதிக அளவில் சுற்றித்திரிகிறது இதனால் குழந்தைகள், பொதுமக்களுக்கு பெரிய தொந்தரவு ஏற்படுகிறது. மேலும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுகிறது. எனவே தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.