திருப்பூர்: அடுத்த இரண்டு நாட்கள் மின்தடை

58பார்த்தது
திருப்பூர்: அடுத்த இரண்டு நாட்கள் மின்தடை
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே கோட்டமங்கலம் துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம், புதூர், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்கார மடக்கு, குடிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை (ஜூன் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அறிவித்துள்ளது. 

அதே போல் அவினாசி பழங்கரை துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஜூன் 12) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குளத்துப்பாளையம், வெங்கடாஜலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளியாளையம், வி.ஜி.வி. நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர். நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன் வர்ஷனி அவென்யூ, அவினாசி லிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வ பாரதி பார்க், பழங்கரை, தேவம்பாளையம், டி.பப்ளிக் பள்ளி பகுதி, ஸ்ரீராம் நகர், நல்லி கவுண்டம்பாளையம், கைகாட்டி புதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ஆர்.டி.ஓ. அலுவலகம் பகுதிகளில் மின்தடை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி