கொண்டத்துகாளியம்மன் கோவிலில்
பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ. 20 லட்சம்
98 கிராம் தங்கம், 353 கிராம் வெள்ளியும் இருந்தது
பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் உண்டியல்களை திறந்து எண்ணும் பணி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செந்தில்குமார், தக்கார் பெரியமருதுபாண்டியன், செயல் அலுவலர் காளிமுத்து, ஆய்வர் வீரப்பன் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. அதில் பக்தர்கள் ரூ. 20 லட்சத்து 75ஆயிரத்து 780-ஐ காணிக்கையாக செலுத்தியிருந்த னர். மேலும் 98. 100 கிராம் தங்கம், 353. 150 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் திருப்பூர் மகா விஷ்னு சேவா சங்கத்தினர், பெருமாநல்லூர் கே. எம். சி. பப்ளிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.