அவினாசியை அடுத்து கருவலூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் வருகிற 25-ந் தேதி பூச்சாட்டு நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்குகிறது.
ஏப்ரல் மாதம் 4-ந் தேதி கிராமசாந்தி, 5-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது. 8-ந் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 9-ம் தேதி காலை திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 2 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தி தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்து சிறிது தொலைவு இழுத்து நிறுத்தப்படுகிறது. பின்னர் 10-ந்தேதி மற்றும் 11-ந் தேதி தேர் இழுக்கப்பட்டு நிலைவந்தடைகிறது.
12-ந்தேதி பரிவேட்டை, தெப்ப உற்சவம் நிகழ்ச்சியும், 13-ந் தேதி தரிசனம், மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. 14-ந் தேதி மறுபூஜை, மற்றும் சுவாமிக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் செயலாளர் செந்தில் மற்றும் அறங்காவலர்குழு தலைவர் லோகநாதன் ஆகியோர் செய்து வருகின்றனர்.