திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி, துரை சாமிநகரை சேர்ந்தவர் விஜய் (வயது 29). இவர் கட்டிட கட்டுமான ஆலோசகராக இருந்து வருகிறார். இவருடைய நண்பர் காஜா உசேன் (35). இவர் அவசர தேவைக் காக கடந்த 2022-ம் ஆண்டு தனது காரை விஜய்யிடம் அடமானமாக கொடுத்து ரூ. 2 லட் சம் வாங்கியதாக தெரிகிறது. அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் காஜா உசேன் விஜய்க்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.
ஆனால் தன்னிடம் வேலை பார்த்த கும்பகோ ணத்தை சேர்ந்த சமீர் (39) மூலமாக விஜய் யிடம் இருந்து காரை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து விஜய் கொடுத்த புகாரின் பேரில் திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குபதிவு செய்து சமீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.