அவினாசி பேரூராட்சி பழைய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை 2- வது முறையாக விற்பனை செய்தமைக்கு உணவு பாதுகாப்பு தர சட்டம் 2006-ன்படி ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது. அப்போது உணவு பாதுகாப்பு அலுவலர் ஸ்டாலின் பிரபு, சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, வரு வாய் அலுவலர் மகேஸ்வரி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.