நாளை மின்தடை பகுதிகள்

2183பார்த்தது
நாளை மின்தடை பகுதிகள்
நாளை மின்தடை

அவினாசி மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: -
பசூர் மற்றும் கானூர்புதூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (திங்கட்கிழமை) இந்த துணை மின்நிலையங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பசூர் துணை மின்நிலையத்திற் குட்பட்ட பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்ல னூர், அயிமாபுதூர், ஒட்டர் பாளையம், ஜீவா நகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காடு புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் ஆகிய பகுதிகளிலும், கானூர் புதூர் துணை மின் நிைலயத்துக்குட்பட்ட பகுதிகளான கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட் டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிப்பாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன் பாளையம் ஒரு பகுதி ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி