ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் குமார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 39). பனியன் நிறுவனத் தொழிலாளி. மது பழக்கத்திற்கு அடிமையானவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த சாந்தகுமார் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.