திருச்சி: மழை எச்சரிக்கை.. வானிலை அறிவிப்பு

60பார்த்தது
திருச்சி: மழை எச்சரிக்கை.. வானிலை அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று (ஜூன் 4) திருவள்ளூர், வேலூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழ்ப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், சேலம், பெரம்பலூர், திருச்சி, திருவாரூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருப்பூர், கோவை, நீலகிரி என 22 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.

 மேலும், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகலளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும், வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தொடர்புடைய செய்தி