தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

77பார்த்தது
தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருச்சி திருவானைக்காவல் கன்னிமார் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. இவரது கணவர் சிவக்குமார் (வயது48) கூலிதொழிலாளி. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிவக்குமார் கடந்த 5 ந் தேதி மது போதையில் பூச்சி மருந்தை குடித்து உள்ளார். பின்னர் மயங்கி விழுந்த அவரை மீட்டு திருவரங்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனை சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் திருவரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி