மேற்கு வங்காள தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

67பார்த்தது
மேற்கு வங்காள தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
மேற்கு வங்காளம் புருசியா மாவட்டம் லூர்திகா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பவுரி (வயது 28). இவரது மனைவி ரோஸ்லின் சரூன் (வயது 26). திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் திருவரங்கம் ரயில் நிலைய புதிய கட்டிட கட்டுமான பணியில் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு திருவரங்கம் ரயில் நிலையம் அருகே தங்குவதற்காக ஒரு செட் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் சுரேஷ்புரியின் மனைவி ரோஸ்லி
சரூன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது சுரேஷ் பவுரி செட்டில் உள்ள கொக்கியில் துண்டால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி ரோஸ்லிசரூன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் வழக்கு பதிந்து, பிணத்தைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சாவுக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி