திருவரங்கத்தில் காய்கறி வியாபாரிகள் திடீர் கடை அடைப்பு

1543பார்த்தது
திருவரங்கத்தில் காய்கறி வியாபாரிகள் திடீர் கடை அடைப்பு
திருச்சி திருவரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இது ஒரு பழமையான மார்க்கெட்டாகும். இங்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்ட 84 கடைகள், மட்டுமல்லாமல் வெளியில் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி, பழங்கள், இலை, தேங்காய் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். திருவரங்கம் பகுதி மக்களுக்கு இது பிரதான மார்க்கெட் ஆக இருந்து வருகிறது.
இந்த நிலையில் சமீப காலமாக திருவரங்கம், மேலூர், தெப்பக்குள தெரு, தேவி தெரு, சிங்கபெருமாள் கோவில் தெரு, திருவானைக்காவல் ஓம் சக்தி கோவில், பெரியார் நகர் ஆகிய 6 இடங்களில் வாரச்சந்தைகள் செயல்பட தொடங்கின.
இதனால் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வாரச்சந்தைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தொடங்கினர்.
இதனால் திருவரங்கம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று திருவரங்கம் அடைய வளஞ்சான் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் வாரச்சந்தைகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி திடீர் கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு வியாபாரிகள் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி