புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியைச் சேர்ந்தவர் கா. சாகுல்அமீது (60). திருச்சி வந்த இவர் மேலப்புதூர் பகுதியில் நின்றிருந்தபோது, அவ்வழியே சென்ற தனியார் பேருந்து அவர் மீது மோதியது. இதில் நிகழ்விடத்திலேயே சாகுல்அமீது உயிரிழந்தார். தகவலறிந்த போலீசார் சடலத்தைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருச்சி மாநகரப் போக்குவரத்து புலனாய்வு தெற்குப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்