திருச்சி பொன்மலை மலையடிவாரம் சகாயமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் திருச்சி மாநகராட்சி ஊழியர். திருமணமாகி 22 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு மகள் சுபாஷினி (வயது 23). இவர் திருச்சி பஸ் நிலையத்தில் உள்ள ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தந்தை ரமேஷ் பொன்மலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இதே போல் திருச்சி உறையூர் பணிக்கன் தெருவை சேர்ந்த தொழிலாளி பொன்னர் என்பவர் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி சுசிலா கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.